பனிக்காலத்தில் சருமத்தை பாதுகாக்க...

பனிக்காலத்தில் சருமம் வறண்டும், செதில் படிந்தும் காணப்படும். இது முகம் மற்றும் உதடு பகுதிகளில் அவலட்சணமான தோற்றத்தை ஏற்படுத்திவிடும்.

இதிலிருந்து சருமத்தை பாதுகாக்க இதோ ஒரு சூப்பர் வழி.

அரை கிலோ துவரம் பருப்பு, 100 கிராம் பயத்தம் பருப்பு, 25 கிராம் கசகசா, 100 கிராம் கஸ்தூரி மஞ்சள் இவற்றை மெல்லிதாக அரைத்துகொள்ளவும்.

இந்த கலவையை தினந்தோறும் முகம் முதல் பாதம் வரை தேய்த்து குளிக்கவும். தொடர்ந்து இவ்வாறு 1 மாதம் செய்துவந்தால் தோலின் வறட்டுத்தன்மை நீங்கி மிருதுவாக ஜொலிக்கும்.